எல்லை பகுதியை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர்….!!

  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
  • நிர்மலா சீத்தாராமன் நாளை பதற்றமான எல்லை பகுதியை நேரில் பார்வையிடுகின்றார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஷ்மீர் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியை பார்வையிட இருக்கின்றார்.பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கண்காணிப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment