உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்..!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த … Read more

#BREAKING : கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது … Read more

மத்திய – மாநில நிதித்துறை செயலர்கள் கூட்டம் செப்.1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

வருவாய் இழப்பீடு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 1ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று முன்தினம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, 2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் … Read more

இனி ஆதார் போதும் ; உடனே பான் எண் கிடைக்கும்.! கட்டணம் இலவசம்.!

ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். ஆதாருக்கு விண்ணப்பம் செய்யவர்களிடம், ஆதார் எண் மற்றும் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் … Read more

மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் – நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இந்திய உணவுக் கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்க மத்திய அரசு இந்த சலுகையை … Read more

மூன்று நாட்களுக்குள் யெஸ் வங்கி நிலைமை சீராகும் – நிதியமைச்சர்

வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில், யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், யெஸ் வங்கியின் … Read more

“அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்” – துணை சபாநாயகர் ரமாதேவி பேச்சு!

நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் … Read more

“ஆசம்கான்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி க்கள் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் ராமதேவி குறித்து  அவதூராக பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற அவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அப்போது, பேசிய ஆசம்கான் ராமதேவி குறித்து ஆட்சேபத்திற்கு உரிய கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி க்கள் பலரும் கூச்சலிட்டனர். ஆசம்கான் … Read more

புதிய வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம்,வெள்ளி விலை உயரும் நிலை!

இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான  இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் … Read more

மக்கள் கருத்தை கேட்ட பின்னே அமல்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன் !

பொதுமக்கள் அனைவரிடமும் கருத்து கேட்ட பின்பே, கஸ்துரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்த புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியை போற்றி வளர்ப்பதற்கு என்றும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசானது முன்னிற்று ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.