திமுக தேய்கின்றன தேய்பிறை – ஜெயக்குமார்

  • உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
  • மேலும் திமுக தேய்கின்றன தேய்பிறை என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   அதிமுக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் மறைவு மறக்க முடியாத தருணம் ,அதிமுகவிற்க்கு பேர் இழப்பு என்று தெரிவித்தார் .அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை

நாடாளுமன்ற தேர்தல் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திமுக. அதிமுக வளர்ச்சியில் ஏற்றுமுகமாக இருக்கும் .திமுக மகத்தான வெற்றி பாதாள சாக்கடை செல்லும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

ஜனநாயகம் முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் எந்த அரசு தலையீடு இல்லை சிறப்பான முறையில் செயல்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசியது கட்சிக்கு எதிராக பேசியது வருத்தம் அளிக்க கூடிய செயலாக இருக்கிறது. கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.