முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தனசேகர், அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.