வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது திமுக அரசு – ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள் என ஈபிஎஸ் பேச்சு. 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது; அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் திமுக தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?; திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனாது? மக்களை ஏமாற்றுகின்றனர் திமுக; காவிரி பிரச்னையின் போது அதிமுக சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். தமிழ்நாடு மக்களுக்கான குரல் கொடுத்தோம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி உள்ளது என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment