திமுக + காங்கிரஸ் தொகுதி பங்கீடு…..மாலை 6 மணிக்கு முடிவாகிறது…!!

  • டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
  • இன்று மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு வெளியாகுமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எவ்வளவு தொகுதிகள் கேட்கும் என்று நேற்றைய தினம் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

திமுக சார்பில் கனிமொழியும் ராகுல் காந்தியை சந்தித்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக – காங்கிரஸ் கட்சியின் தொகுதி உடன்பாடு தெரியவரும் என்று என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment