ஈபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்…!

இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ்-க்கு, ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பதாக தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ்-க்கு, ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புரட்சித்தலைவரால் துவக்கப்பட்டு, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அஇஅதிமுகவின் உட்கட்சி தேர்தலில் கழக இணை ஒருங்கிணைப்பாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புச்சகோதரர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.