அதிமுகவுடன் இணைந்து போட்டியா? தனித்து போட்டியா? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 
  • தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.

ஆனால்  அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம், அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அவர் பதில் கூறுகையில்,மாவாட்ட வாரியாக பேசி முடிவெடுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. எந்தெந்த வழக்குகளை போட்டு தேர்தலை நிறுத்தலாம் என திமுக ஒரு பட்டியலே வைத்துள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.