20 ரூபாய்க்கு பெட்ரோல்.. இலவச பைக்.. மேக்கப் கிட்.! வாக்காளர்களை அரசவைத்த வேட்பாளர்.! .

ஹரியானாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், இலவச பைக், 20 ரூபாய்க்கு பெட்ரோல், 100 ரூபாய்க்கு சிலிண்டர், மேக்கப் கிட் என வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வேட்பாளர் கொடுத்த அதிரிபுதிரியான வாக்குறுதிகள் தான் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. அரியானா மாநிலம், சிர்சாத் எனும் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜெய்கரன் லத்வால் எனும் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலில் நம்பமுடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை … Read more

#BREAKING: அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை … Read more

#ELECTIONBREAKING: அதிமுக கூட்டணி முறிவு.! பாஜக தனித்துப் போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது. ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கு … Read more

சென்னை மாநகராட்சி – திமுக கூட்டணியில் இடப்பங்கீடு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், … Read more

அதிமுகவுடன் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் – ஜெயக்குமார்

அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார். செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுதியாக தெரிவித்தார். செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.மேலும்,ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர் என்றும் இந்த நிகழ்வில் அரசியல் … Read more

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு – தமிழக அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்…!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் … Read more

#Breaking:புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்- தேதி அறிவிப்பு..!

புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாவது … Read more