திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் பேராதரவு உண்டு.! கீ.வீரமணி பேட்டி.!

திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும். – திக தலைவர் கீ.வீரமணி பேட்டி.

திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திக தலைவர் கீ.வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்றும் ஒரே கொள்கையுடன் நான் பயணித்து வருகிறேன். திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளால் சமூகநீதிக்கு எதிராக குரல் தற்போது எழுந்துள்ளது, அதனை முறியடிப்பது தான் எங்களின் முதலாய பணி. என குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 10% இட ஒதுக்கீடு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கொடுமைகளை எதிர்த்து சட்ட போராட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இருந்தாலும், மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் என்றும் நடத்தும் எனவும் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment