விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரம் – 4 பேரின் முன்ஜாமீன் ரத்து!

விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொய் புகாரளிக்க சதி செய்த குற்றச்சாட்டில் சிபிஐயின் மேல்முறையீடு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி கேரள அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், அக்., 21ல் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994-ல் இஸ்ரோவில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் நான்கு பேருக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அதாவது, 1994-ஆம் ஆண்டு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை சிக்கவைத்த விசாரணை அதிகாரிகளுக்கு 2021-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment