திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 54 மின்கலத்திலான  குப்பை வண்டிகள் அனுப்பி வைப்பு!

பிரதம மந்திரியின் தூய்மை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி  மாநகராட்சி மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் மின்கலத்திலான சிறிய 54 குப்பை அள்ளும் வண்டிகள் கொண்டு வரப்பட்டு விரைவில் மண்டலங்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருநெல்வேலி  மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.திருநெல்வேலி  மாநகராட்சி காலம் மாற்றம் ஏற்படுவதற்கு தகுந்து மாற்றம் அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பைகள், கழிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த  ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள்  வைக்கப்பட்டு … Read more

இந்து அறநிலையத் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

நெல்லையில் இந்து அறநிலையத் துறைக்கு, இந்து அறநிலைய கோயில்களில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்தது. இதனையடுத்து, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அப்புகாரின் பெயரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சத்தியசீலன், தங்கபாண்டியன், முனுசாமி ஆக்கிய மூன்று பெரும் கோவில்களில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லையில் பதிவான கள்ளஓட்டு விவகாரம் : 49A விதிப்படி வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை பணகுடி வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவர், தனது ஓட்டை மற்றோரு நபர் போட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, நெல்லை பணகுடி வாக்குச்சாவடி எண் 49A  விதிப்படி மணிகண்டன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

வேலூர் தேர்தல் ரத்து – வைகோ கண்டனம்

மக்களவை தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, மத்திய, மாநில அரசுகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் வைகோ … Read more

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு : பாத்திமா முஷப்பர்

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தலைவியும், வக்பு வாரிய உறுப்பினருமான பாத்திமா முஸப்பர் அவர்கள்  நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ” பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி, பொய்களை … Read more

தேர்தல் பறக்கும் படையினர் நெல்லையில் 1.40 லட்சம் பறிமுதல்…

தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை அருகே 1.40 லட்சம் பறிமுதல். வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும், மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் இந்த விதிமுறைகளை கைக்கொள்ளும் வண்ணம், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நெல்லையில்  தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்தனர். நெல்லை … Read more

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!5 பேர் உயிரிழப்பு!!

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி தாமதகின்றது.மேலும் தீயை அணைக்கும் பணியில் … Read more

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!!

கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தெற்கு திரிபுரா மாநிலத்தில் உள்ள பெலோனியா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியால் 2013-ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் நிறுவப்பட்டிருந்த மாமேதை லெனின் சிலை உடைதெறியப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எதிரான சிம்மசொப்பனமாக புரட்சியாளர் லெனின் இன்றும் திகழ்வதால் அவர்கள் பதட்டம் கொள்கிறார்கள்! யார் லெனின்? முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய மகத்தான வரலாற்று நாயகன் அவர். மார்க்சியத்துக்கு உலக அரங்கில் முதன்முதலாக செயல் … Read more

நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலையை திறந்து வைத்த சீத்தாராம் யெச்சூரி

நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து … Read more

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர்…..!!! 2பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!!

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  நெல்லையில் டவுன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் மேசையை தட்டி விட்டதாக கூறியுள்ளார். அப்போது வகுப்பில் உள்ள ஆசிரியர் ஜோசப் செல்வின் அந்த மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் சகா மாணவர்கள் முன்பு அடித்ததால் மனமுடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் … Read more