மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை பணகுடி வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவர், தனது ஓட்டை மற்றோரு நபர் போட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, நெல்லை பணகுடி வாக்குச்சாவடி எண் 49A விதிப்படி மணிகண்டன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.