இருசக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியர்..!10 ஆண்டுகள் சிறை!

பெரம்பலூர் மகிளா நீதிமன்றம், பெரம்பலூர் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த  முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்  27ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரு சக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் தாய் மஞ்சுளா, பெரம்பலூர் அனைத்து … Read more

மகளிர் தின விழாவில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்க உறுதியேற்றுக் கொண்ட மாணவிகள்…!!

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு பள்ளி மாணவர்கள் கல்விசுற்றுலா…!

தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெரம்பலூரில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து மகிளா நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் அருகே பேக்கிரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

பெரம்பலூர்: சிறுவாச்சூர் பகுதியில் உள்ள பேக்கரியின் குளிர்சாதனப் பெட்டி சிலிண்டர் வெடித்து தீ விபத்து; கடையில் வேலை பார்த்த பாண்டியன் என்பவருக்கு படுகாயம்; தீயணைப்புத்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. source: dinasuvadu.com

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பினால் சித்தளியை சேர்ந்த ராஜா, ஓதியத்தை சேர்ந்த செல்வம், பசும்பலூரை சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் ராமலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அருங்கால் கல்லக்குடியை சேர்ந்த ராமன், சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் இறந்திருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் … Read more

பெரம்பலூரில் பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு ; 11 பேர் காயம்

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது வழக்குப்பதிவு!

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது பணமோசடி புகார்; திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

பெரம்பலூர் அருகே கார் விபத்து இருவர் பலி…!

துறையூர் ,பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டத்தூர் பிரிவு ரோட்டின் அருகே சுமார் மாலை 4மணி அளவில் கோர விபத்து நடந்தது. செல்லிபாளையம் ஊராட்சி ராஜீ அவர்களின் மனைவி சுலோச்சனா மற்றும் செல்லிபாளையத்தை சேர்ந்த இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே அகலா மரணம் அடைந்தனர் .

பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் பைக் திருட்டு

பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை  கடந்த 13ம் தேதியன்று தனது  வீட்டின் பின்புறம்  நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர்,  இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில்  சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள … Read more