C.B.I நாகேஸ்வராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!

  • C.B.I இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவ் நியமனம்
  • முழுநேர இயக்குநர் நியமிக்கப்பட்டு விட்டதால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிபிஐயின் இயக்குநராக இருந்தவர் அலோக் வர்மா.இவருக்கும்  சிறப்பு இயக்குனராக இருந்த நாகேஷ் ஆஸ்தானா_வுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  இருவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐக்கு முழுநேர இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment