தனியாக அதிசயத்தை நிகழ்த்த முடியாது…தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி  பேச்சு…!!

  • பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 
  • பிரியங்கா காந்தி 

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்ட்_டில் பகுதியில் கிழக்கு மண்டல உத்தரப்பிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்களை சந்தித்தார் . அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர் , கட்சியை பலப்படுத்துவதற்கு தங்களின் ஒத்துழைப்பு அவசியம் . வெற்றி எனும் பழத்தை சுவைக்க ஓட்டுச்சாவடிகள் தான் முக்கியம் என்பதால் வாக்குச்சாவடிகளில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் தனியாக தன்னால் எந்த அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் அவர் கூறினார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment