#BREAKING: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா? – வெளியான முக்கிய தகவல்!

ஒற்றை தலைமை கோரிக்கை கொண்டு வராவிட்டால் 23 தீர்மானங்களில் கையெழுத்திட மாட்டோம் ஈபிஎஸ் ஆதரவு திட்டவட்டம்.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் தாமதமாக தொடங்க உள்ளது. வழிநெடுகிலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வரவேற்பு காரணமாக பொதுக்குழு கூடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு  கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம், முழக்கங்கள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தீர்மானங்கள் மீது ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒற்றை தலைமையக எடப்பாடி பழனிசாமி தேர்வாகும் வரை பிற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை கொண்டு வராவிட்டால் 23 தீர்மானங்களில் கையெழுத்திட மாட்டோம் என ஈபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment