#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாக தனி நீதிபதி அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவிப்பு. அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் கடிதத்தை திரும்ப பெற்றதாக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் … Read more

#Breaking:145 தடை உத்தரவு அமல்;2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் காலை அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.இதனிடையே,இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.மேலும், அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை … Read more

#Breaking:சற்று முன்…அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் – பொதுச்செயலாளர் அறிவிப்பு!

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்தது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து,தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும்,இபிஎஸ் ,கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். … Read more

#Breaking:”எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது;திமுக ஆட்சி முடிவு கட்டுவதான் லட்சியம்” – இபிஎஸ் அதிரடி!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,பொதுக்குழு விழா மேடையில் பேசிய இபிஎஸ் கூறுகையில்:”கட்சிக்காக உழைத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்.ஒற்றைத் தலைமை வேண்டும் என நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த வகையில்,கட்சியைக் காக்க ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தேடுத்துள்ளீர்கள்”,என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து,பேசிய இபிஎஸ்:”அம்மாவிடம் … Read more

#BigBreaking::கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – பொதுக்குழு அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்,அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படும் தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,மேடையில் பேசிய அவர் கூறியதாவது:”பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று ஓபிஎஸ், மனோஜ், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். குறிப்பாக,ஓபிஎஸை  கட்சியிலிருந்து நீக்குவதற்கான … Read more

#Breaking:நிரந்தர பொ.செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து;துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மாற்றம்!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதே சமயம்,அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிரவிஎற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும்,அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் … Read more

#Breaking:இரட்டைத் தலைமை ரத்து – இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக,எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும்,ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை … Read more

#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சகட்ட பரபரப்பு…கடும் மோதல்;தடையை உடைத்து தலைமை அலுவலகம் நுழைந்த ஓபிஎஸ்!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஈபிஎஸ் சென்றுள்ளார். அதே சமயம்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்துள்ளார்.இதனிடையே,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.குறிப்பாக,ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திகுத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும்,கட்டை,கம்புகள்,கற்களை எறிந்தும் இரு தரப்பினரும் கடும் … Read more

#Breaking:பெரும் பதற்றம்…ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல்;ஆதரவாளருக்கு கத்திக்குத்து!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்த வேளையில்,சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்.பொதுக்குழுவுக்கு ஈபிஎஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் ஓபிஎஸ் வரவுள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ள நிலையில்,தற்போது ஓபிஎஸ் கட்சி தலைமை … Read more