#BREAKING : தமிழகத்தில் மேலும் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

தமிழகத்தில், ஜூலை 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து, தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

அதன்படி, ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுங்களுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக தமிழகத்தில் மேலும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில், மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர் பிற துறைகளில் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.