#BREAKING: கடற்கரைகளுக்கு செல்ல நாளை முதல் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாளை முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கபடுகிறது என்றும் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்