முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் – செல்லூர் ராஜூ பாராட்டு!

முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஓமைக்ரான் மற்றும் கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.

கொரோனா பரவலை முன்பு அதிமுக அரசு எப்படி கட்டுப்படுத்தியதோ, அதுபோன்ற சூழலை இந்த திமுக அரசு உருவாக்க வேண்டும். முதலமைச்சர் முக ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டியிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் போறாது என்றும் அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் வேண்டுகோள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்தவிட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார். மேலும், பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்