சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க.  ஆட்சிக்கு  வந்தது-தயாநிதி மாறன்

சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க.  ஆட்சிக்கு  வந்தது என்று திமுக எம் .பி. தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார்.

சென்னை சவுகார் பேட்டையில் பொது கூட்டம் ஓன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக  காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,திமுக எம் .பி. தயாநிதி மாறன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம் .பி. தயாநிதி மாறன், சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக  சொல்லியே பா.ஜ.க. 5 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு  வந்தது . இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.