பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளார். வந்ததும் கலகலப்பாக அனைத்து போட்டியாளர்களுடனும் பேசுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram