அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் – சென்னை மேயர்

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல்.

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்,  சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறினார். இதற்கு பதிலளிடது பேசிய சென்னை மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும் என திட்டவட்டமாக பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment