அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் – முதலமைச்சர் பழனிசாமி 

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தில்  முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்படும்.அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.

2011-ல் தயாரிக்கப்பட்ட திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி என கூறப்பட்டது, ஆனால் ரூ.5500 கோடி தான் கணக்கில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Leave a Comment