புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் 85% கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன. மரங்கள் விட்டுப்போனால் குறைதீர் கூட்டத்தில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம். மர வியாபாரிகளை கொண்டு மரங்கள் அகற்றப்படும் என்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்..