தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து.  20க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் காயமடைந்தனர்.

திருப்பூர் முத்தூர் பகுதியில் கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரி பேருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது கூலிப்பாளையம் அருகே பேருந்து ஓட்டுநர் -க்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment