வெளிநாட்டில் ஆவின் பால் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது…! பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தரமான பொருள் என்பதால்தான் வெளிநாட்டில் ஆவின் பால் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,தரமான பொருள் என்பதால்தான் வெளிநாட்டில் ஆவின் பால் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆவின் பாலக மட்டுமல்லாமல் ஆவின் இனிப்பகத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா முறையாக வழங்கப்படுகிறது. முறையாக பணப்பட்டுவாடா நடப்பதால்தான் விவசாயிகள் அதிகளவு பாலை ஆவினுக்கு கொடுக்க முன்வருகின்றனர்.அதேபோல் சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.மக்களை ஏமாற்றி யாரும் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment