காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல்…!

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் மீது அரிவாளால் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பிள்ளையார் பாளையம் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் (26) என்பவர் மீது 6-பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். வழக்கறிஞர் சிவக்குமார் (26) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment