18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:மாறி மாறி தீர்பளித்த நீதிபதிகள்!செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவு!

இன்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வழக்கு விவரம்:

அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

தீர்ப்பளிக்க வருகை:

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்  உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் வந்தனர். தலைமை நீதிபதி அறை,வழக்கறிஞர்கள் அமரும் பிரிவில் கூட்டம் நிரம்பியது.

Related image

பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி இந்திரா பானர்ஜி வந்தனர்.

இந்நிலையில்  6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகே 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இன்றைய தீர்ப்பின் விவரம்:

தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தீர்ப்பு:

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று  தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என்றும்  சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது .சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி சுந்தர் தீர்ப்பு:

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று  நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய அமர்வு தகுதி நீக்க வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றனர்.

முன்னதாக டிடிவி தினகரன் அணி ஆலோசனை:

Image result for தினகரன்

டிடிவி தினகரன் இல்லத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல் .ஏக்கள் திருப்போரூர் கோதண்டபானி, தஞ்சாவூர் ரெங்கசாமி, சோலிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்ரமணி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் வந்தனர்.

தற்போது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை ஆலோசனை கூட்டத்தில் விளத்திக்குளம் உமாமகேஸ்வரி, குடியாத்தம் ஜெயந்தி பத்பநாபன் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment