தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தல்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்