மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து !

பிரதமர் நரேந்திர மோடி கூறியது , மத்திய பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோலும் அம்சங்களைக் கொண்டிருப்பதாக  பாராட்டி உள்ளார்.

அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள பிரதமர், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தகத்திற்கான சூழலை மட்டும் இந்த அரசு எளிதாக்கவில்லை, வாழ்வதற்கான சூழலையும் எளிதாக்கி உள்ளது என்பதை உணர்த்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment