மோசமான வானிலை – டெல்லியில் 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன..!

Lufthansa flight

டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாகனம் ஓட்டுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், ஆனந்த் விஹார் 388, அசோக் விஹார் 386, லோதி சாலை 349 மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 366 என காற்றின் தரக்குறியீடு காணபப்டுகிறது. அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்! இந்த இன்று காலை மோசமான வானிலை … Read more

2018 தமிழக பட்ஜெட்:நீதித்துறை, காவல்துறை, தீயணைப்புக்கான அறிவிப்புகள்!

இன்று காலை வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில்  தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணியளவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் காவல்துறை, தீயணைப்பு, நீதித்துறை தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு: காவல்துறை பயன்பாட்டிற்காக 15 காவல்நிலைய கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் கட்டித்தரப்படும். மணலியில் ரு.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும்  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு … Read more

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சிறப்பம்சம் என்ன?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில்முனைவோருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு … Read more

ஆந்திராவில் மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி முழு அடைப்புப் போராட்டம்!

  இடதுசாரிக் கட்சியினர்  ஆந்திர மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி, கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பதியில் ஆந்திர … Read more

தொடரும் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளும் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக  வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. எனினும், நண்பகல் நிலவரப்படி, சென்செக்ஸ் 33,886 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, அதிகபட்சமாக 310 புள்ளிகள் வரை சரிந்து 10,276 என்ற அளவிற்கு இறங்கியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியானதால், … Read more

பட்ஜெட்டால் தங்கம் இறக்குமதி குறைவு !

இந்த ஜனவரியில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி  வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. வழக்கமாக முன்னணியில் இருக்கும் இந்தியாவின் தங்க இறக்குமதி இந்த ஆண்டு ஜனவரியில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் தங்க இறக்குமதி 47 புள்ளி ஒன்பது டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 30 டன்னாக அதாவது 37 சதவீதம் குறைந்திருந்தது. தங்க இறக்குமதிக்கு இந்த பட்ஜெட்டில் வரி … Read more

தமிழக அரசு தனது முதலாளி தனத்தை காண்பிக்கிறது-கமலஹாசன்

மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது” என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உரையாற்றுவதற்காக அமெரிக்கா கிளம்பிய போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கிராமத்தின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகதையாக தொடர்கிறது. பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற … Read more

ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு !

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி  ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ரயில்களில், வை-பை வசதி மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். 2018-2019ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வேத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரயில்வே துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனத்துவ மேம்பாடு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு … Read more

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து !

பிரதமர் நரேந்திர மோடி கூறியது , மத்திய பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோலும் அம்சங்களைக் கொண்டிருப்பதாக  பாராட்டி உள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள பிரதமர், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தகத்திற்கான சூழலை மட்டும் இந்த அரசு எளிதாக்கவில்லை, வாழ்வதற்கான சூழலையும் எளிதாக்கி உள்ளது என்பதை உணர்த்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு … Read more

பங்குசந்தையில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு விலக்கு!

நிதியமைச்சர் அருண்ஜேட்லி  கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு வருடம் வைத்திருந்த போதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், … Read more