இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக செய்தது-மோடி

நேற்று அரையிறுதி போட்டியில்  இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று தொடங்கியது.

நியூஸிலாந்து அணி  50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 240 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது . ஆட்டத்தின் தொடக்க வீரர்கள் ரோஹித் , ராகுல் , கோலி , மூன்று பேரும் 1 ரன்னில் வெளியேறினார்.

மத்தியில் களமிங்கிய டோனி , ஜடேஜா இருவரின் கூட்டணியில் பரிதாப நிலையில் இருந்த இந்திய அணி மீண்டு வந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவரில்  அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் “இந்தியா அணி தொடரில்  பேட்டிங், பந்து வீச்சு, சிறப்பாக செய்தது. வெற்றியும் ,தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி  இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என பதிவிட்டு உள்ளார்.

author avatar
murugan