மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக மாணிக்கம் தாகூர் தேர்வு!

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை கொறடாவாக காங்கிரஸ் குழு தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட காங்கிரஸ் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிகளில் இரண்டாம் இடத்தை கங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவாக மாணிக்கம் தாகூர் எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவையில் கடந்த 2009 – 2014 வரை விருதுநகர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த முறை இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.