இன்று நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
செவிலியர்கள் கலந்தாய்வில் விதிமுறை மீறல்கள் உள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரதுறை ஊழியர்கள் நலச்சங்க செயலர் கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ,இன்று நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது .