உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராம சபை போட்டிருக்கலாமே ?தினகரன் கேள்வி

தப்பிலிதனத்தின் மறுஉருவம் கருணாநிதியின் வாரிசு என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தருமபுரி அருகே பாலக்கோட்டில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,ஸ்டாலின் குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக செய்த பாவத்திற்கு காசி அல்ல. எங்கு போனாலும் பாவம் தீராது.உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராம சபை போட்டிருக்கலாமே ? பலகட்சி பலசாலி ஸ்டாலின். தப்பிலிதனத்தின் மறுஉருவம் கருணாநிதியின் வாரிசு.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது. ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment