மோடி எதற்காக ஆந்திரா வருகிறார்….உயிருடன் இருக்கிறோமா என்று பார்க்கவா…சந்திரபாபு நாயுடு கேள்வி…!!

ஆந்திர மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றாத பிரதமர் நரேந்திரமோடி ஏன் ஆந்திரா வருகின்றார் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அனந்தபூரில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் ஆந்திரபிரதேச மக்களுக்கு எந்தவித நல்லதும் செய்யாமல் , மக்களின் கோரிக்கைகளை ஏற்காத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் ஆந்திரா_விற்கு  வருகிறார்.பிரதமர் வருவது எதுக்கு என்று  ஒன்னும் புரியவில்லை , நாங்கள்   உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை பார்க்க வருகிறாரா? என்று ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆந்திரா வருவதை ஒட்டு மொத்த ஆந்திர மாநில மக்களும் எதிர்கின்றார்கள் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மாநிலத்தின்  மறுசீரமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தும் பட்சத்தில் , பிரதமர்  ஆந்திரா வருவதில் எங்களுக்கு எந்த ஆட்பேசனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment