ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 10 நாள் பரோல் …!நாங்க ரெடி …!தமிழக அரசு

ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் முறைப்படி விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கில்,  அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
Image result for தமிழக
அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதன்படி பரிந்துரை செய்யப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர் ரவிச்சந்திரன்.இந்நிலையில் ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க கோரி தாயார் ராஜேஸ்வரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அதில்    ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்லப்பாண்டி நீதிமன்றத்தில்  பதில் அளித்தார் .அதில் ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் முறைப்படி விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயார்.7 பேரின் விடுதலை தொடர்பான விவகாரம் ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் நீண்ட விடுப்பு கோரினால் முடிவெடுப்பதில் சிக்கல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment