கஜா புயல் பாதிப்பு…..தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவி…மத்திய மந்திரி நட்டா…!!

கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய மந்திரி நட்டா உறுதியளித்துள்ளார்.
கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் தேவைகள், மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment