நெருங்கி வரும் கஜா புயல் …!ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் …!பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு ….!

சில பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல்  திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment