6 வீரர்கள் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழப்பு!

6 வீரர்கள்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர்.

சிறப்புக் காவல் படையினர் இங்குள்ள கார்வா மாவட்டத்தில்  ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் கண்ணி வெடியை புதைத்து வைத்து வெடிக்கச் செய்தனர்.

சம்பவ இடத்திலேயே 6 வீரர்கள் பலியாகினர். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகளை தேடி வரும் போலீசார், அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர்.

Leave a Comment