தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஏற்பாடுகள் தீவிரம்.! – சென்னை மாநகராட்சி.!

சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது – சென்னை மாநகராட்சி.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன

தேங்கி நிற்கும் மழைநீரை முழு வீச்சில் சென்னை நகராட்சி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதற்காக 420 மின் பம்ப் மோட்டார்கள் சென்னை மாநகராட்சியில் களமிறக்கப்பட்டுள்ளன. எனவும்,

இதவரை கனமழை காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த 25 மரக்கிளைகள் உடனடியாக மாநகராட்சியில் அகற்றபட்டுள்ளது எனவும் சென்னை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment