3ஆம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடர்.! எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்.!

நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் இரங்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. நேற்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதே போல நேற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பிரச்சனை காரணாமாக வெளிநடப்பு செய்தனர்

அதன் காரணமாக இன்று இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் 3ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய 3ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் திமுக மற்றும் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அல்லாத ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்  கலந்துகொண்டனர். அதில் தங்கள் தொகுதி பிரச்சனைகளை அமைச்சர்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்

அதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment