KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் ராணா வரை களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால் 51-4 என இக்கட்டான நிலையில் நடராஜன் பந்து வீச்சுக்கு கொல்கத்தா அணி  திணறி வந்தது.

அதன் பிறகு களமிறங்கிய ரமன்தீப் சிங், பிலிப் சால்ட்டுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது. பொறுமையாக விளையாடி ரன் சேர்த்த பிலிப் சால்ட் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி காட்ட தொடங்கினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் அதிரடி காட்ட கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 65* ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் நடராஜன் 3 விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதை தொடர்ந்து 209 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ஹைதராபாத் அணி.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.