மாணவர்களே ரெடியா…10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு? – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20 ஆம் தேதி) வெளியீடு.

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் 17 ஆம் தேதியும்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில்,10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

அதன்படி,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20-ம் தேதி) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (S.S.L.C) நாளை (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்.

இதற்கிடையில்,நாளை காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.inhttp://dge2.tn.nic.inhttp://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Comment