108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு …!தற்காலிகமாக வாபஸ் …!

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

தீபாவளி தினத்தன்று 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி  போரட்டம் நடத்த உள்ளதாக “108 ஆம்புலன்ஸ்” ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.நவம்பர் 5 ஆம் தேதி இரவு முதல் 6 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு  வெளியிட்டனர்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்தது

இந்நிலையில்  108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.அதேபோல்  ஊக்கத்தொகை ரூ.7,200 வழங்குவதாக அரசு உறுதி அளித்ததை அடுத்து வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

Leave a Comment