கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஅமைச்சர் எம்.சி.சம்பத்

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாடு தொழில் துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அறியாமையில் மு.க.ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது.  திமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது அதிமுக அரசு ஆட்சியில் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றரை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .ரூ.1,04,961 கோடி முதலீடு பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது, 1,61,822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.