விரைவில் ஈரோட்டில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்!மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,ஈரோட்டில் சோதனை முறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வாய்க்காமேடு பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, துணைமின் நிலையம் அமைக்க, 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறிய தனியார் கல்லூரி, தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறினார்.

தனியார் கல்லூரி நிலத்தை கொடுத்தால், அதற்கான தொகை வழங்கப்படும் எனக் கூறிய அவர், பெருந்துறை முதல் பவானி வரை சோதனை முறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment