ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு …!ஆட்சியர் வீரராகவ ராவ் அதிரடி உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிடட அறிவிப்பில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அதேபோல் இன்று முதல்  முதல் செப்டம்பர் 15 வரையும்  அக்டோபர் 20 முதல் 31 வரையும் வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment